தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு... 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் - ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்

x

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 அதிகாரிகள் உட்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

உளவுத்துறை அளித்த தகவலின்பேரில், ரஜோரி பஜிமால் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதில், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை இந்திய ராணுவத்தினர் சுற்றிவளைத்த நிலையில், இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், அதிகாரிகள் இருவர் உட்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்வதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்