அசுர வேகத்தில் பற்றி எரிந்த நெருப்பு.. குவிந்த தீயணைப்பு வாகனங்கள்... கருகி நாசமான குடோன்

x

தெலங்கானாவில் வேளாண் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம், நச்சாரம் பகுதியில், வேளாண் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து கிடங்கில் நேற்றிர​வு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஏராளமான பொருட்கள் தீக்கிரையாகின. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்