நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி..! சாலையில் சிதறி.. துடிதுடித்த மீன்கள்..!

x

தெலங்கானாவில், மீன்கள் ஏற்றப்பட்ட லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து மீன்கள் ஏற்றப்பட்ட லாரி, தெலங்கானா மாநிலம் வனபர்த்தி அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து அதிலிருந்த மீன்கள் சாலையில் சிதறி துள்ளித் துடித்தன. அவ்வழியாக வந்தவர்கள், மீன்கள் மீதே தங்கள் வாகனங்களை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சாலையில் சிதறிக்கிடந்த மீன்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்