கல்யாண மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தில் முடிந்த அழகு சிகிச்சை

x

திருமணத்தை முன்னிட்டு ஸ்மைல் டிசைனிங் சிகிச்சை மேற்கொண்ட மணமகன், சிகிச்சையின் போதே உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது. 28 வயதான லட்சுமி நாராயண விஞ்சித்திற்கு, ஓரிரு வாரங்களில் திருமணம் நடக்கவுள்ள நிலையில், தனது பல்வரிசையை சீர் செய்து அழகுபடுத்திக் கொள்ள நினைத்துள்ளார். இதற்காக ஹைதரபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள எஃப்.எம்.எஸ். இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஸ்மைல் டிசைனிங் எனப்படும் பல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த லட்சுமி நாராயணவின் குடும்பத்தினர், அவரை மீட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு அதிகளவில் மயக்க மருந்து கொடுத்ததே காரணம் என குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் உயிரிழந்த மணமகனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்