`அக்கா, அக்கா' என அழைத்த அயோக்கியன்.. நம்பி சென்ற ஆசிரியை - அரங்கேறிய அதிபயங்கரம் அதிர்ந்த போலீசார்

x

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் மாணிக்யன ஹள்ளியை சேர்ந்தவர் தீபிகா. மேலக்காட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையான இவர், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கர்நாடகாவில் பிரபலமாகியிருந்த நிலையில், இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி சென்ற தீபிகா, அதன் பின் வீடு திரும்பாத நிலையில், கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, மேலக்காட்டில் உள்ள மலையடிவார பகுதியில் தீபிகா சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், தீபிகாவுடன் நெருங்கி பழகி வந்த 22 வயது இளைஞரான நிதேஷ் கவுடா என்பவர் தீபிகாவை கொன்றது வெளிச்சத்திற்கு வந்தது. தீபிகாவுடன் ரீல்ஸ் பதிவிட உதவி செய்வதாக கூறி பழகி வந்த நிதேஷ் கவுடா, ஒரு கட்டத்தில் அத்துமீறி நெருங்கி பழக முயன்றதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் அக்கா என அழைத்து பின்பு சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற நித்தேஷ் கவுடாவிடம் இருந்து தீபிகா விலகிய நிலையில், இதனால் இளைஞர் ஆத்திரமடைந்திருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பேரில் தீபிகாவை தனியே அழைத்த நித்தேஷ் கவுடா, தீபுகாவின் சுடிதார் சாலால் அவரை கழுத்தை நெரித்து கொன்று புதைத்தது தெரியவர இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்