"தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா..." - அள்ளி அள்ளி வீசும் பிரதமர் மோடி

x

வரும் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில், இன்று தெலங்கானா செல்லும் பிரதமர் மோடி, 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, ஐதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். முன்னதாக தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை கோர் லோடிங் பணியை பார்வையிடுகிறார். இது இந்தியாவின் அணுமின் திட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் சண்டிகோலில் 19 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்