"குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள்.." வார்தைவிட்டதேஜஸ்வி ... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு எதிரான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின்போது குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள் என தேஜஸ்வி யாதவ் பேசியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தான் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெறுவதாக தேஜஸ்வி யாதவ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள் என பேசியதாக தேஜஸ்வி யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்தது.


Next Story

மேலும் செய்திகள்