வெயில் தாக்கத்தால் வயிற்று வலி - விபரீத முடிவு எடுத்த வடமாநில பெண்

x

ஒடிசாவை சேர்ந்த சரோஜ் மாலிக் - சபிதா மாலிக் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஈரோட்டில் கோவலன் வீதி பகுதியில் தங்கி தம்பதி இருவரும் வேலை பார்த்து வந்தனர். ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தனக்கு வயிற்று வலி அதிகமாகி வருவதாகவும், இதனால், சொந்த ஊருக்கே போய்விடலாம் என மனைவி சபிதா மாலிக் தனது கணவரிடம் கூறி வந்துள்ளார். அப்போது கடன் சுமை அதிகமாக இருப்பதால், கடனை அடைத்துவிட்டு சொந்த ஊர் செல்லலாம் என கணவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சபிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்