திடீரென அழுது கொண்டே ஓடிவந்த ஒருவர்...கர்நாடகாவில் ஆளுநர், முதல்வர் விழாவில் பரபரப்பு

x

பெங்களூருவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெல்லாட் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்னர், கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கேலரியில் இருந்த ஒரு நபர் திடீரென மைதானத்திற்குள் குதித்து, முதல்வர் சித்ராமையாவை நோக்கி கையில் துண்டு சீட்டுடன் கூச்சலிட்டபடி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். விசாரணையில் அவர் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தம் என்பதும், இதற்கு முன்பு பல அரசு விழாக்களில் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பதும் தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்