திடீரென பற்றிய தீ - அருகில் பெட்ரோல் பங்க் - மேற்குவங்கத்தில் பரபரப்பு

x

மேற்குவங்க மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில், பெட்ரோல் விற்பனை நிலையம் அருகிலுள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கரும்புகை வெளியேறியது. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். தீ விபத்து காரணமாக அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பதற்றமடைந்தனர். கிடங்கில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்