திடீரென வெடித்த சிலிண்டர்..திருமண வீட்டில் நடந்த அபசகுனம்..புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்

x

புதுச்சேரியில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் வீடு முழுவதும் சேதமானது. புதுச்சேரி, முதலியார் பேட்டையை சேர்ந்த பழனி மகள் சண்முகப்பிரியா என்பவர் சிலிண்டரை பற்ற வைத்தபோது, அடுப்பில் தீப்பிடிக்காமல் நேரடியாக சிலிண்டரில் தீப்பிடித்துள்ளது. தீயை அணைக்க முடியாததால் வெளியே ஓடிய நிலையில், சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வருகின்ற 24-ஆம் தேதி மூத்த மகள் திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் கருகின. வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்