கர்நாடகாவில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - சக மாணவர் வெறிச்செயல்

x

கர்நாடகாவில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - சக மாணவர் வெறிச்செயல்

மனதை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

#karnataka | #thanthitv

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை, கல்லூரி வளாகத்தில் வைத்தே சக மாணவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமேட். காங்கிரஸ் கட்சி நிர்வாகியான இவர், உளப்பள்ளி மாநகராட்சி கவுன்சிலரான நிலையில், இவரது மகள் நேகா அருகில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படித்து வந்த பயாஸ் என்ற இளைஞர், நேகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இளைஞரின் காதலை நேகா தொடர்ந்து ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த இளைஞர், சம்பவத்தன்று மீண்டும் தன் காதலை வெளிப்படுத்தி தகராறு செய்திருக்கிறார். இதில், கல்லூரி வளாகத்திலே இருவருக்குமிடையே வாக்குவாதமான நிலையில், பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்