ஜி 20 மாநாட்டில் கெத்தாக நிற்கும் நடராஜர் சிலை | Nataraja Statue

x

கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 27 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை, டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.டெல்லியில் ஜி-20 மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பிரகதி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் முகப்பில், வைப்பதற்காக, கும்பகோணம் அருகே சுவாமிமலை சிற்பக்கூடத்தில் பிரம்மாண்டமான நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டது. 27 அடி உயரமும், 18 டன் எடையும் கொண்ட இந்த நடராஜர் சிலை, லாரி மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. தற்போது டெல்லி பிரகதி மைதானம் முகப்பில் பிரம்மாண்டமான நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக நிற்கும் நடராஜர் சிலை, பிரகதி மைதானம், அங்கு சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்