நாகர்கோவில் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு கட்டண ரயில் சேவையை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும், 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் நாகர்கோவிலில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில், நாளையும், 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் வரும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்