4 டன் ரேஷன் அரிசியை கடத்தல்..மடக்கி பிடித்த ஆந்திர போலீஸ் - "இது மட்டும் இன்னும் மாறவே இல்ல"

x

தமிழ்நாட்டில் இருந்து, ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். குப்பம் அருகே, திருப்பதி பைபாஸ் சாலையில் ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகன ஓட்டுநர் பிரபாகரனை கைது செய்த போலீசார், 4 டன் அரிசியையும் சரக்கு வாகனத்தோடு பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்