சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு"இந்த சம்பவம் ஒரு டிரெய்லர் மட்டுமே" சமூக வலைதள பதிவு

x

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

"இந்த சம்பவம் ஒரு டிரெய்லர் மட்டுமே"

மிரளவைக்கும் சமூக வலைதள பதிவு

#salmankhan #house #gunshort

மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, சிறையில் உள்ள கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோத‌ர‌ர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு டிரெய்லர் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். இதை கடைசி எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இதன்பிறகு வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு மட்டும் நடத்தப்படாது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய், தேடப்படும் கேங்ஸ்டர் கோல்டி ப்ரார் ஆகியோர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்