தேசத் துரோக சட்டம்..! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தகவல்

x

தேசத் துரோக சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுக்களை ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்