சபரிமலை பக்தர்களுக்கு இது கட்டாயம்..!

x

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மாசி மாத பூஜைகள் நாளை முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் காலையில் நெய் அபிஷேகம் நடத்தலாம் என்றும், 18ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் என்றும், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்