தகவலுக்கு 10லட்சம் ரூபாய் சன்மானம் - தமிழக காவல்துறைக்கு வந்த புகைப்படம்

x

பெங்களூருவில் உள்ள தனியார் உணவகத்தில், கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்ததில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்தேகிக்கப்படும் நபர் வாடிக்கையாளர் போல உணவகத்திற்குள் நுழைந்து, வெடிகுண்டை வெடிக்கச் செய்தது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, சந்தேகப்படும் நபரின் படங்களை என்ஐஏ வெளியிட்டதுடன், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றவாளியின் படத்தை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்து, விவரங்கள் ஏதேனும் உள்ளதா? என என்ஐஏ அதிகாரிகள் தகவல் கேட்டுள்ளன​ர்.


Next Story

மேலும் செய்திகள்