ரோட்டில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார் - அதிர்ச்சி காட்சிகள்

x

தேகானா நகரில் விஸ்வகர்மா ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் நடந்து சென்றவர்களுக்கு பின்னால் வந்த பொலிரோ வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நேரிட்டதாகவும், இதனால் கார் ஓட்டுநரும் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்