பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த விவகாரம் - வெளியான பகீர் பின்னணி

x

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கினர். பஞ்சாப்-ஹரியானா கானாரி எல்லையில் கடந்த வாரம் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக போலீசாரின் தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவை சேர்ந்த 21 வயதாகும் சுப்கரன்சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். சம்பவம் கடந்து ஒருவாரத்திற்குப் பின் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். சுப்கரன்சிங் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், சுப்கரன் சிங், ரப்பர் குண்டு தலையில் தாக்கி காயம் ஏற்பட்டு இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மண்டை ஓட்டின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டதும், உடலில் வேறு எந்தப் பகுதியிலும் காயங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்