"பாஜகவுக்கு வாக்களித்தால் இது தான் நடக்கும்..." - புதுச்சேரியில் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு

x

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, புதுச்சேரி அதிமுக சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. AFT திடலில் இருந்து பேரணியை தொடங்கிய அதிமுகவினர், சட்டமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அவர், மாநிலங்களுக்கான அதிகாரங்களை பறிக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். புதுச்சேரி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால், முதல்வராக உள்ள ரங்கசாமி நகராட்சி சேர்மானகி விடுவார் எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்