கார் கண்ணாடியை உடைத்த சம்பவம்.. போலீஸ் முன்னே எகிறிய இளைஞர்.. நடுரோட்டில் திடீர் பரபரப்பு

x

புதுச்சேரியில், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், இளைஞர்கள் காரின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரியை சேர்ந்த சக்தி என்பவர், தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது, முத்தியால்பேட்டை பகுதியில் காரில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் சென்ற இளைஞர்கள், காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்ததுடன், கார் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்து தகராறில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட இளைஞரை மட்டும் காவல்நிலையம் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்