பிரபல உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட பாஜக பெண் நிர்வாகிகள்..திடீர், வாந்தி மயக்கம்

x

புதுச்சேரியில், பாஜக பெண் நிர்வாகிகள் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 31 ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக பெண் நிர்வாகிகள் மூவர், பிரபல உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டதாகவும், அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உணவக மேலாளரிடம் கேட்ட போது முறையான பதிலளிக்கவில்லை எனக் கூறிய மூவரும் உணவகத்தின் மீது போலீசில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்