போராடுபவர்களை இப்படியும் கைது செய்யலாம்....போலீசார் கையாண்ட வினோத முறை ....

x

தெலங்கானா அரசை கண்டித்து ஹதராபாத் மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை, போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக, கனமழை பெய்தது. இந்தநிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கு தீர்வு காண மாநில அரசு தவறிவிட்டதாக கூறி, ஹைதராபாத் மாநகராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார், குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்