ஹிமாச்சல் பிரதேசம் செல்கிறார் பிரியங்கா காந்தி
இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று ஹிமாச்சல் பிரதேசம் செல்கிறார்.நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய இரண்டு நாள் பயணமாக ஹிமாச்சல பிரதேசத்திற்கு செல்கிறார். கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மணாலி, குலு, மண்டி, சிம்லா மற்றும் சோலன் மாவட்டங்களுக்கு பிரியங்கா காந்தி செல்ல உள்ளார். பல்வேறு நிவாரணப் பணிகளை துவக்கி வைப்பதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 400 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். நிலச்சரிவு காரணமாக, பல வீடுகளும் இடிந்தன. இந்த நிலையில்,பிரியங்கா காந்தி அங்கு செல்ல உள்ளார்.
Next Story