யார் கண்ணிலும் படாத தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி காங். வட்டாரம் முக்கிய தகவல்

x

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், டாமன் மற்றும் டையூ தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டாமன் மற்றும் டையூ காங்கிரஸ் தலைவர் கேதன் படேல் வெளியிட்ட அறிவிப்பில், தனது தொகுதியில் சில முக்கிய தகவல்களை சேகரிக்குமாறு காங்கிரஸ் உயர்நிலைக் குழு கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். தனது தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இருப்பினும் இது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால், உத்தர பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் சோனியா காந்திக்குப் பதிலாக, இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்