"தமிழகம் வந்தும் கண்டுகொள்ளாத பிரதமர்" - முரசொலி விமர்சனம்

x

தமிழகம் வைத்த கோரிக்கைகள் எதற்கும் பதில் சொல்லாமல், கேட்ட தொகை எதையும் கொடுக்காமல் பிரதமர் மோடி சென்றுவிட்டதாக, முரசொலி தலையங்க கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டதும், அன்றைய தினமே பிரதமர் மோடி போய் பார்ப்பதாகவும், ஆனால், தமிழ்நாட்டிற்கு பார்க்க வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஒரு மாதம் கழித்து தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போதும், வெள்ளம் பாதித்த பகுதி மக்களைப் போய் பார்க்கவில்லை என குறை கூறியுள்ளது. ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரணத்தொகையாக 68 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருப்பதாகவும், அதில் இருந்து தான் தமிழகம் கேட்பதாகவும், கொடுக்க மனமில்லை... அதனால் அவர்கள் கொடுக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்