திடீரென ஏற்பட்ட வலி... டயரில் அமர்ந்து ஆற்றைக் கடந்த கர்ப்பிணி - வைரல் வீடியோ

x

முலுகு மாவட்டத்தில் உள்ள எளிசெட்டி பெள்ளி கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சுனிதா... இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், ஜம்பன்னா ஆற்றைக் கடந்து வெளியே செல்லும் நிலை உள்ளது. ஜம்பன்னா ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக ஓடும் நிலையில், கர்ப்பிணி சுனிதாவை டயரில் உட்கார வைத்து, கிராம மக்கள் டயரை அக்கரைக்கு தள்ளிச் சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற சூழல்களில் தவித்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்