திடீரென காரை நடு ரோட்டில் நிறுத்தி டிரைவர் செய்த காரியம்.."கீழ இறங்கு நீ.." கடுப்பான வாகன ஓட்டிகள்..

x

புதுச்சேரியில், மது போதையில் காரை ஓட்டி வந்த நபர் நடுரோட்டில் நிறுத்திவிட்டு வாகனத்தை எடுக்காததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரிக்கு வெளியூரில் இருந்து சுற்றுலா வந்த நபர் ஒருவர், மதுபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். புஸ்சி வீதி - மிஷன் வீதி சந்திப்பு அருகே காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காரிலேயே அமர்ந்திருந்தார். இதனால் வாகன ஓட்டிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மற்றொரு நபர், அந்த காரை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்