"எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது" அதிகாரி ரவி வர்மா ஆவேசம்

x

புதுச்சேரியில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. பிரேத பரிசோதனை நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் இல்லம் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவி வர்மா, சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்பதே தன்னுடைய கருத்தாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்