புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 50% உயர்வு.. நிதித்துறை செயலர் அதிரடி

x

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது சமீபத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி, அம்மாநில நிதித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்