பிரபல இயக்குனர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்... அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்... வெளியான பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் கொச்சியில் திரைப்பட இயக்குனர் ஜோஷியின் வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

vovt

கொச்சி பனம்பள்ளி நகரிலுள்ள திரைப்பட இயக்குனர் ஜோஷி வீட்டிற்குள், அதிகாலை நுழைந்த திருடன் வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள், 25 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளான். இந்த கொள்ள சம்பவம் குறித்து எர்ணாகுளம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்திய நிலையில், அதிகாலை 1.30 மணியளவில், கழுத்தில் ஸ்கார்ப் அணிந்த ஒருவர், இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்