வெறும் ஒரு பாக்கெட் மிளகாய் தூள்... பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம் - ஷாக்கான போலீசார்

x

கேரளாவின் மூவாட்டுபுழா வாழப்பள்ளியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் மேலாளரான ராகுல் என்பவர், கச்சேரி பகுதியில் இயங்கி வரும் மற்றொரு வங்கிக்கு சுமார் 26 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது, ராகுலை வழிமறித்த இருவர், அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகைப்பையை பறித்துச் சென்றதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ராகுல் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கண்ணில் மிளகாய் பொடி தூவியதால் காயமடைந்த ராகுல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்