பிரகாசமான எதிர்காலம்... பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள்

x

வளர்ச்சி திட்டங்கள் கிடைக்காமல் நமது வருங்கால சந்ததிகள் இன்னல்களைச் சந்திக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சுமார் 85 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மைசூரு-சென்னை வழித்தடம் உள்பட நாடு முழுவதும் 10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஆட்சியில் இருந்த கட்சி சமூக நலனைக் காட்டிலும் அரசியல் ஆதாயங்களுக்கு முன்னுரிமை அளித்ததால் ரயில்வே துறை பெரிதும் பாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்