ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்தில் பூமி பூஜை செய்த பிரதமர் மோடி..

x

நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் ஏழைகள் குடிப்பதற்கு குடிநீர் கூட ஏற்பாடு செய்யவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்தில் பூமி பூஜை செய்தார். பின்னர், நூறு கோடி ரூபாய் செலவில், கட்டப்பட உள்ள நினைவிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த சமூகங்களில் இருந்து பல உயரிய ஆளுமைகள் உருவாகி இருப்பதாக தெரிவித்தார். தேசத்தை கட்டமைப்பதில் மிதமான பங்களிப்பை அளித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்