அன்று வீடியோ எடுத்து வெறுப்பை விதைத்த மாணவர்கள்.. - இன்று அன்பால் வென்ற மாற்றுத்திறனாளி பேராசிரியர்

x

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பேராசிரியரை மாணவர்கள் கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், மாணவர்கள் மீது புகாரளிக்க மறுத்த பேராசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஒன்றில் அரசியல் அறிவியல் பிரிவில் பணியாற்றி வரும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பிரியேஷ், தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அப்போது மாணவர்கள் விளையாடியும், செல்போன் பார்த்தும் அவரை கிண்டலடித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுதொடர்பாக 6 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் மீது புகாரளிக்க பேராசிரியர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்