பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிப்பு - ஏன்? எங்கே?

x

தங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ராஜஸ்தான் மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர், 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் செயல்படாது என அறிவித்துள்ள அவர்கள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வரும் 12 ஆம் தேதி மாலை 6 மணி வரை, ராஜஸ்தான் பெட்ரோல் டீலர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்