வைக்கத்தில் பெரியார் நினைவிடம் சீரமைக்கும் பணி - அமைச்சர் நேரில் ஆய்வு

x

கேரளா மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவிடம் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். முன்னதாக, வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலு பலமுறை வைக்கம் சென்று பணிகளை ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில், மீண்டும் சென்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பணிகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்