தயாரானது அறிக்கை... ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு தேர்தல்.. அதிமுக்கிய தகவல்

x

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வுக்குழுவினர், தங்களது அறிக்கைகை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது, 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இந்த குழு சமர்ப்பித்துள்ளது. 191 நாட்கள் நடத்திய ஆய்வு, ஆலோசனை, கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள், அரசியல் அமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், சேர்க்கப்பட வேண்டிய புதிய அம்சங்கள் குறித்து இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

2029ஆம் ஆண்டில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே தேர்தல் நடத்துவதை மனதில் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்