ஒரு பக்கம் JN 1இன்னொரு பக்கம் Covid..சத்தமே இல்லாமல் உயரும் எண்ணிக்கை

x

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 841 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 309-ஆக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா, பீகாரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, இந்தியாவில் ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178ஆக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்