"2036 - ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி" - மோடி பரபரப்பு பேச்சு Modi | BJP

x

மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டத்தை பிரதமர் மோதி துவக்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது பெருமை அளிப்பதாக குறிப்பிட்டார். அகமதாபாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு பரிந்துரை செய்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் விரைவில் சாதகமான செய்தி கிடைக்கும் என தான் நம்புவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்