"இது பா.ஜ.க.வின் பழைய பழக்கம்"...கொந்தளித்த பஞ்சாப் முதல்வர்

x

சண்டிகர் மேயர் தேர்தல் நாட்டின், ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்று, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துரதிர்ஷ்டவசமாக, இதே மாதத்தில் தான் குடியரசு தினத்தை கொண்டாடினோம் என்றார். பாஜகவினரால், அரசியலமைப்பு உடைந்து விட்டததாகவும், மேயர் தேர்தலை பா.ஜ.க.வினர் மீடியாக்கள் முன்பும், கேமராக்கள் முன்பும் சூறையாடியதாக கூறினார். இது பாஜகவின் பழைய பழக்கம் என்ற பகவந்த் மான், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களில் இதைத்தான் செய்தார்கள் என்று, குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்