"அதிகாரிகள் செயலால் அதிருப்தி; விரைவில் நடவடிக்கை பாயும்.." - சபாநாயகர் எச்சரிக்கை புதுவை

x

புதுச்சேரி மாநிலத்தில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தடையாக இருக்கும் அரசு அதிகாரிகள் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று, சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் "நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்" எனும் விழிப்புணர்வு யாத்திரை இன்று காரைக்கால் அடுத்த நல்லம்பல் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சபாநாயகர் செல்வம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்