கணவர் இறந்ததால் கிடைத்த வேலை - மயானத்தில் பணியாற்றும் வீர பெண்மணி

x

ஒடிசாவில், நகராட்சி மயானத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை எரித்துள்ளார். ஒடிசா மயூர்பஞ்ச் நகராட்சியில் உள்ள தகன மையத்தில் பணியாற்றி வந்த நபருக்கு பல ஆண்டுகளுக்குமுன் உடல்நலம் பாதித்ததால், அவரது மனைவி லட்சுமி ஜேனா, கணவரின் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மயானத்தில் உள்ள மைதானம் அருகில் குடும்பத்துடன் தங்கி இந்தப் பணியை மேற்கொண்டுள்ளார். லட்சுமி ஜேனாவின் இந்த சேவையை, நகராட்சித்தலைவர் கிருஷ்ணானந்த் மொஹந்தி பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்