முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய ஒடிசா விரைந்த தனிப்படை

x

பெண் போலீஸ் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய, தனிப்படை போலீசார் ஒடிசா விரைந்துள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி விட்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவர் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு தப்பிச் சென்று இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தனிப்படை ஒடிசா விரைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்