நீட் பயிற்சியில் உ.பி. மாணவர் விபரீத முடிவு.. சிக்கிய உருக்கமான கடிதம்

x

உத்தரப்பிரதேசத்தில், நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உத்தப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த மாணவர் ஹிமான்ஷு, நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக் கடிதத்தில், பணத்தை வீணடித்ததற்காக மன்னிக்க வேண்டுமென பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தான் முதலிடம் பெறுவேன் என்று நினைத்ததாகவும், ஆனால் தோல்வியுற்றவனாகவே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் முயற்சித்ததாகவும், ஆனால் எதையும் சாதிக்க முடியவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் மாணவர் ஹிமான்ஷு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்