`விதிமீறல்'... கவனித்த கலெக்டர்... பறந்த உத்தரவு - வேகவேகமாக வந்த பாஜக பிரமுகர்... பாய்ந்தது வழக்கு

x

நாகையில் பாஜக கொடியுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

நாகை மாவட்டத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ரங்கதாஸ்,கட்சி கொடியுடன் கூடிய காரில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வருகை தந்தார். இதை கவனித்த ஆட்சியர், பாஜக கொடியுடன் கூடிய காரின் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார். உடனடியாக காரில் இருந்த பாஜக கொடி அகற்றப்பட்ட நிலையில், ரங்கதாஸ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்