நகைக்கடையை சூறையாடிய மர்மகும்பல்-ரூ.15 கோடி.. கொத்து கொத்தாக அள்ளி போட்ட தங்க வைர பொருட்கள்

x

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனின் பிரபல நகைக்கடைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் 15 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் உதய தினத்தையொட்டி டேராடூனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் வருகைக்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப் பட்டிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. டேராடூன் எஸ்எஸ்பி அஜய் சிங் கூறுகையில், நகைக் கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து, நகைகளை பைகளில் நிரப்பி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகத் தெரிவித்தார். மேலும், 5 குற்றவாளிகளில், 3 பேர் ஷோரூமுக்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக அவர் கூறியுள்ளார்... அதே சமயம், அவர்களின் கூட்டாளிகள் இருவர் வெளியில் காவலுக்காக நின்றுள்ளனர்... குற்றவாளிகளைத் தேட 4 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டேராடூன் அருகே உள்ள சஹாஸ்பூரில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 1 கார் மீட்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கும்பல் பீகாரைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்