முல்லைப் பெரியாறு அணை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

தமிழக பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு, வல்லக்கடவு வழியாக சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த பொறியாளர் ரெங்கன், தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான 1886ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, அணையை பராமரிக்க கேரள அரசின் அனுமதி தேவையில்லை என தெரிவித்துள்ளார். எனவே, தமிழக பொறியாளர்கள் வல்லக்கடவு வழியாக சென்று, முல்லைப் பெரியாறு அணையை சீரமைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு, மனுவை தள்ளுபடி உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்